VAO NOTIFICATION 2014- 2,342 விஏஓ பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும்



 2,342 கிராம நிர்வாக அலுவர் பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்த  அட்டவணையை  இன்று நவநீதகிருஷ்ணன் வெளியிட்டார்.


அப்போது பேசிய அவர் வரும் மார்ச் மாதத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள 2342 கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்படும்.  ஜூன் 15ம் தேதி தேர்வு நடக்கும் . மேலும் காலியாக உள்ள 1181 குரூப் 2ஏ பணியிடங்களுக்கு, ஜனவரி 3ம் வாரத்தில் தேர்வு அறிவிக்கப்படும், மே மாதம் 18ம் தேதி நடக்கும் என்றார்.